Tamilnadu
அறுவை சிகிச்சையின் போது "முத்தே என் முத்தாரமே" பாடல் பாடிய பெண்: நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள்!
சென்னைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. பாடலாசிரியரான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்தபோது, புற்றுநோய் கட்டி நுரையீரல் உட்படப் பல பகுதிகளில் பரவி இருந்தது தெரிந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது அவருக்கு மயக்கமருந்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது, சீதாலட்சுமி "முத்தே என் முத்தாரமே" என்ற பாடலை முணுமுணுக்கத் துவங்கினார். இதேபோல் அவர் பல பாடல்களைப் பாடினார். இதை பார்த்து மருத்துவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முதல் முறையாக அறுவை சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் பாட்டுப்பாடிய சம்பவம் நடந்துள்ளது என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சையின் போது சீதாலட்சுமி பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!