Tamilnadu
லிஃப்டில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்; நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்க்கு காப்பு - சென்னையில் பரபரப்பு!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காய்கறி டெலிவரி செய்ய சூளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஷ் என்ற இளைஞர் சென்றிருக்கிறார்.
ஆறாவது மாடியில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு லிஃப்டில் வந்த விக்னேஷுடன் அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரும் வந்திருக்கிறார்.
தனியாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தில் லிஃப்டில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக இருந்து விக்னேஷ் அநாகரிக செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் சார்பில் வீட்டு உரிமையாளர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!