Tamilnadu
ஆன்லைன் தேர்வா? - நேரடித் தேர்வா?.. கல்லூரி மாணவர்கள் குழப்பத்திற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தைத் அடுத்து கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரி தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அமைச்சர் பொன்முடி கூறுகையில், "பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அதேபோல் ஏற்கனவே அறிவித்தபடி 1, 3, 5வ்து பருவத் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும். எனவே ஆன்லைன் தேர்வு நடைபெறும்போது மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம். வீட்டில் இருந்தே ஆன்லைன் தேர்வு எழுதலாம்.
தேர்வு இல்லாத மற்ற நாட்களில் கல்லூரிக்கு வரவேண்டும். கல்லூரிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்