Tamilnadu
இனிமேல் இந்த 5 மோட்டல்களில் பேருந்து நிற்க தடை : மோசமான உணவு காரணமாக அதிரடி முடிவு எடுத்த தமிழ்நாடு அரசு!
மாமண்டூர் பேருந்து பயண வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சுகாதாரமின்றி தரமற்ற உணவுகள் விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அரசுப் பேருந்துகள் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மாமண்டூர் உணவகத்தைத் தொடர்ந்து மேலும் ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விக்கிவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!