Tamilnadu
இனிமேல் இந்த 5 மோட்டல்களில் பேருந்து நிற்க தடை : மோசமான உணவு காரணமாக அதிரடி முடிவு எடுத்த தமிழ்நாடு அரசு!
மாமண்டூர் பேருந்து பயண வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சுகாதாரமின்றி தரமற்ற உணவுகள் விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அரசுப் பேருந்துகள் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மாமண்டூர் உணவகத்தைத் தொடர்ந்து மேலும் ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விக்கிவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!