Tamilnadu

காதல் மனைவி அடித்துக் கொலை; தற்கொலை நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி?

திருவாரூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் கேசவமூர்த்தி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனை முடிவில், பிரியதர்ஷினி உடலில் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரியதர்ஷினி உறவினர்கள் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியைக் கணவனே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்... நடந்தது என்ன?