Tamilnadu
காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்... நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி எஸ்தர் சந்தியா. இந்த தம்பதி காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். மேலும் விவாகரத்து கேட்டு எஸ்தர் சந்தியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதனால் கணவர் மோகன்ராஜ் சில நாட்களாக வேதனையிலிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோகன்ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !