Tamilnadu
ரயிலுக்கு அடியில் சிக்கிய 9 மாத குழந்தை, தாய்.. காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு : நடந்தது என்ன?
வேலூர் மாவட்டம், பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. இவர் தனது 9 மாத குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யுவராணியும் குழந்தையைத் தூக்குவதற்காக நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் இறங்கினார். அந்தநேரம் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இருவர் இருப்பதைப் பார்த்து ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்.
ஆனால் ரயில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்று நின்றது. இதனால் அவர்கள் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனே இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சாதூரியமாக குழந்தையை அனைத்துக் கொண்டு தண்டவாளத்தில் யுவராணி படுத்துக் கொண்டதால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!