Tamilnadu
ரயிலுக்கு அடியில் சிக்கிய 9 மாத குழந்தை, தாய்.. காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு : நடந்தது என்ன?
வேலூர் மாவட்டம், பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. இவர் தனது 9 மாத குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யுவராணியும் குழந்தையைத் தூக்குவதற்காக நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் இறங்கினார். அந்தநேரம் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இருவர் இருப்பதைப் பார்த்து ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்.
ஆனால் ரயில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்று நின்றது. இதனால் அவர்கள் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனே இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சாதூரியமாக குழந்தையை அனைத்துக் கொண்டு தண்டவாளத்தில் யுவராணி படுத்துக் கொண்டதால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!