Tamilnadu

கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை; வருத்தத்தில் கணவர் தற்கொலை - ராமநாதபுரத்தில் பயங்கரம்!

ராமநாதபுரம் மாவட்டம், அடஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லாடமுருகன் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மனைவியில் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவியை கொலை செய்த வருத்தத்தில் லாடமருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கணவன், மனைவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.. விசாரணையில் பகீர் தகவல்!