Tamilnadu
மனிதனை விழுங்கியதா மலைப்பாம்பு?.. வதந்தி பரவியதால் பரபரப்பு: நடந்தது என்ன?
மதுரை மாவட்டம், தேனக்குடிபட்டி காட்டுப்பகுதியில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிய நிலையில் அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே கிடந்துள்ளது.
அப்போது, அங்கு வந்த ஆடு மேய்ப்பவர்கள் மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்துள்ளனர். மேலும் பாம்பின் வயிறு பெரிதாக இருந்ததால் இது மனிதனை விழுங்கிவிட்டதான நினைத்துள்ளனர். இதனால் மலைப்பாம்பு மனிதனை விழுங்கிவிட்டது என வதந்தி உடனே பரவத் தொடங்கியது.
இது குறித்து வனத்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் உடனே தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, மலைப்பாம்பின் வாயிலிருந்து இறந்த நிலையில் நாய் ஒன்று வெளியே வந்து விழுந்தது. பிறகுதான் பாம்பு மனிதனை விழுங்கவில்லை நாயை விழுந்துகியது என தெரியவந்தது. பின்னர் மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறறு மலைப்பாம்பை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றனர்.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!