Tamilnadu
மனிதனை விழுங்கியதா மலைப்பாம்பு?.. வதந்தி பரவியதால் பரபரப்பு: நடந்தது என்ன?
மதுரை மாவட்டம், தேனக்குடிபட்டி காட்டுப்பகுதியில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிய நிலையில் அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே கிடந்துள்ளது.
அப்போது, அங்கு வந்த ஆடு மேய்ப்பவர்கள் மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்துள்ளனர். மேலும் பாம்பின் வயிறு பெரிதாக இருந்ததால் இது மனிதனை விழுங்கிவிட்டதான நினைத்துள்ளனர். இதனால் மலைப்பாம்பு மனிதனை விழுங்கிவிட்டது என வதந்தி உடனே பரவத் தொடங்கியது.
இது குறித்து வனத்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் உடனே தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, மலைப்பாம்பின் வாயிலிருந்து இறந்த நிலையில் நாய் ஒன்று வெளியே வந்து விழுந்தது. பிறகுதான் பாம்பு மனிதனை விழுங்கவில்லை நாயை விழுந்துகியது என தெரியவந்தது. பின்னர் மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறறு மலைப்பாம்பை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றனர்.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!