Tamilnadu
தோழியின் குளியலறை புகைப்படத்தை ஆண் நண்பருக்கு அனுப்பிய உயிர் தோழி.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதேபகுதியைச் சேர்ந்த தனது 23 வயதாகும் பெண் தோழியுடன் நன்றாக பழகி வந்துள்ளார். சிறு வயதில் இருந்தே பழக்கம் நட்பு இருந்ததாதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கருக்கலில் உள்ள காவல் நிலையத்தில் தனது தோழி மற்றும் தோழியின் நண்பன் மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த புகார் அளித்த இளம் பெண், தான் குளிப்பதை தனது சொல்போனில் புகைப்படம் எடுத்து தனது தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த பெண் தோழியோ, தனது தோழி அனுப்பிய அந்தரங்கப்புகைப் படத்தை மற்றொரு நெருக்கமான ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆண் நண்பர் அந்த புகைப்படத்தைக் காட்டி, அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண், அதன்பின்னர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்டபோலிஸார், அவரது தோழி மற்றும் ஆண் நண்பர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!