Tamilnadu
தோழியின் குளியலறை புகைப்படத்தை ஆண் நண்பருக்கு அனுப்பிய உயிர் தோழி.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதேபகுதியைச் சேர்ந்த தனது 23 வயதாகும் பெண் தோழியுடன் நன்றாக பழகி வந்துள்ளார். சிறு வயதில் இருந்தே பழக்கம் நட்பு இருந்ததாதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கருக்கலில் உள்ள காவல் நிலையத்தில் தனது தோழி மற்றும் தோழியின் நண்பன் மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த புகார் அளித்த இளம் பெண், தான் குளிப்பதை தனது சொல்போனில் புகைப்படம் எடுத்து தனது தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த பெண் தோழியோ, தனது தோழி அனுப்பிய அந்தரங்கப்புகைப் படத்தை மற்றொரு நெருக்கமான ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆண் நண்பர் அந்த புகைப்படத்தைக் காட்டி, அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண், அதன்பின்னர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்டபோலிஸார், அவரது தோழி மற்றும் ஆண் நண்பர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!