Tamilnadu
சிறுமி வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிய இளைஞர்.. தானும் குடித்து தற்கொலை முயற்சி : நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்று வேல்முருகன் பெண் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் டிசம்பர் 28ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்து சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியுள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்துள்ளார்.
இதையடுத்து இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிரமாக சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலிஸார் இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!