Tamilnadu
கண்டெய்னர் லாரியில் சிக்கி 5 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர். நள்ளிரவில் நடந்த கோரச் சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், மோர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இளைஞரான இவர் வேலைக்குச் செல்வதற்காக நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
பின்னர் வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்றபோது திடீரென குணசேகரனின் இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இதில் குணசேகரனின் உடல் கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தியதால் லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதைப் பார்த்த போலிஸார் கண்டெய்னர் லாரியை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிச் சென்று பிடித்தனர்.
பின்னர் லாரியின் அடியில் சிதிலமடைந்து கிடந்த குணசேகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!