Tamilnadu
விபத்தில் உயிரிழந்த காவலர்.. உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த போலிஸ் உயரதிகாரிகள்: நெகிழ்ச்சி சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், மாவூத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கொடைக்கானலில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாலசுப்பிமணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் போலிஸார் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் சொந்த ஊரான மாவூத்தன்பட்டியில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாலசுப்பிரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா, ஆய்வாளர் சண்முகலட்சுமி உள்ளிட்ட போலிஸார் உயிரிழந்த பாலசுப்பிரமணியின் உடலைச் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
பிறகு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாலசுப்பிரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த போக்குவரத்து போலிஸாருக்கு உயரதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!