Tamilnadu
விபத்தில் உயிரிழந்த காவலர்.. உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த போலிஸ் உயரதிகாரிகள்: நெகிழ்ச்சி சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், மாவூத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கொடைக்கானலில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாலசுப்பிமணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் போலிஸார் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் சொந்த ஊரான மாவூத்தன்பட்டியில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாலசுப்பிரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா, ஆய்வாளர் சண்முகலட்சுமி உள்ளிட்ட போலிஸார் உயிரிழந்த பாலசுப்பிரமணியின் உடலைச் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
பிறகு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாலசுப்பிரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த போக்குவரத்து போலிஸாருக்கு உயரதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!