Tamilnadu
பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தைக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுயைச் சேர்ந்த சிறுமியைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
அந்தச் சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். பிறகு இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று வழக்கின் மீதான இறுதி விசாரணை நடந்த நிலையில், நீதிபதி சுகந்தி, குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
Also Read
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!