Tamilnadu
பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தைக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுயைச் சேர்ந்த சிறுமியைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
அந்தச் சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். பிறகு இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று வழக்கின் மீதான இறுதி விசாரணை நடந்த நிலையில், நீதிபதி சுகந்தி, குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!