Tamilnadu
பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தைக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுயைச் சேர்ந்த சிறுமியைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
அந்தச் சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். பிறகு இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று வழக்கின் மீதான இறுதி விசாரணை நடந்த நிலையில், நீதிபதி சுகந்தி, குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!