Tamilnadu
கோவில்களில் தங்கி கஞ்சா விற்ற போலி சாமியார்.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
சென்னை ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர் சேகர். இவர் பொதுமக்களிடம் குறி சொல்லிவந்துள்ளார். மேலும் சாமியார் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு கஞ்சா வியாபாரமும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் மாற்று வேடத்தில் கஞ்சா வாங்குவதுபோல் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேகர் சாமியார் வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோவில்களில் தங்கி கஞ்சாக விற்றது தெரியவந்தது.
மேலும், இவர் சாமியார் தோற்றத்தில் இருந்ததால் யாருக்கும் சேகர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேரும் கஞ்சாவை எடுத்து வந்து போலி சாமியார் சேகரிடம் கொடுத்து விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலி சாமியார் சேகர், ராஜா மற்றும் ஆசைதம்பியை ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஏழு கிலோ கஞ்சாவை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!