Tamilnadu
கோவில்களில் தங்கி கஞ்சா விற்ற போலி சாமியார்.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
சென்னை ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர் சேகர். இவர் பொதுமக்களிடம் குறி சொல்லிவந்துள்ளார். மேலும் சாமியார் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு கஞ்சா வியாபாரமும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் மாற்று வேடத்தில் கஞ்சா வாங்குவதுபோல் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேகர் சாமியார் வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோவில்களில் தங்கி கஞ்சாக விற்றது தெரியவந்தது.
மேலும், இவர் சாமியார் தோற்றத்தில் இருந்ததால் யாருக்கும் சேகர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேரும் கஞ்சாவை எடுத்து வந்து போலி சாமியார் சேகரிடம் கொடுத்து விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலி சாமியார் சேகர், ராஜா மற்றும் ஆசைதம்பியை ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஏழு கிலோ கஞ்சாவை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!