Tamilnadu
“குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. 4 வயது மகன் பரிதாப பலி”: விசாரணையில் பகீர் தகவல்!
சிவகங்கை மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு லட்சுமணன் என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் லட்சுமி தனது சகோதரிக்கு மூன்று பவுன் நகை கொடுத்துள்ளார். இதை அவர் திருப்பி கொடுக்கவில்லை. பிறகு இதையறிந்த கணவர் நகையை வாங்கி வரும் படி மனைவி லட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லட்சுமி சகோதரியின் வீட்டிற்குச் சென்று நகையைத் திருப்பி கேட்டுள்ளார். இதற்கு அவர் நகையை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் லட்சுமி கணவனுக்கு எப்படி பதில் சொல்வது என தெரியாமல் விரக்தியுடன் இருந்துள்ளார்.
பின்னர் லட்சுமி தனது நான்கு வயது மகனை கூட்டிச் சென்று திருமங்கலம் அருகே உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, அவரும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் லட்சுமியை உயிருடன் மீட்டனர். பிறகு சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மகனைக் கிணற்றில் வீசி கொலை செய்த தாயைக் கைது செய்தனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!