Tamilnadu
YOUTUBE பார்த்து பிரசவம் பார்ப்பதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவதென்ன?
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். மேலும் துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறையாகும். ராணிப்பேட்டையில் யூடியூப் பார்த்து மனைவிக்குக் கணவன் பிரசவம் பார்த்தது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தவுடன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும்.
இந்த வாரம் சனிக்கிழமையன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளதால், அன்று நடைபெற வேண்டிய கொரோனா தடுப்பூசி முகாம் வரும் இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும்" என தெரிவித்தார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!