Tamilnadu
YOUTUBE பார்த்து பிரசவம் பார்ப்பதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவதென்ன?
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். மேலும் துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறையாகும். ராணிப்பேட்டையில் யூடியூப் பார்த்து மனைவிக்குக் கணவன் பிரசவம் பார்த்தது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தவுடன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும்.
இந்த வாரம் சனிக்கிழமையன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளதால், அன்று நடைபெற வேண்டிய கொரோனா தடுப்பூசி முகாம் வரும் இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும்" என தெரிவித்தார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!