Tamilnadu
ஏலச்சீட்டு மோசடியில் சிக்கிய அப்பாவிகள்; ரூ.48 லட்சத்தை ஏப்பம் விட்ட தாய் மகன் சிக்கியது எப்படி?
சென்னை குன்றத்தூர் புதுநெல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அலமேலு (32) உள்ளிட்ட 29 பேர் மோகலிங்கம் நகரில் வசித்து வரும் ராபியா (49) என்பவரும் அவரது மகன் சபீர் அக்தர் (26) மற்றும் பக்ருதீன் நடத்தி வந்த உரிமம் இல்லாத மாதாந்திர ஏலச்சீட்டில் சேர்ந்து சீட்டு மற்றும் பண்டு பணம் கட்டியிருக்கிறார்கள்.
சீட்டு முடிந்த பிறகும் ரூ.48 லட்சம் பணத்தைத் திரும்ப கொடுக்காமல் ராபியா, சபீர் மற்றும் பக்ருதீன் ஆகியோர் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட மூவர் மீதும் சட்ட நடவடிக்கை கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளரின் ஆணைப்படி, துணை ஆணையாளரின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் காவல் ஆய்வாளர் கீதா, தலைமை காவலர்கள் கொண்ட தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் புகார்தாரரின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் தனிப்படையினரின் தேடுதல் வேட்டையில் மயிலாடுதுறையில் தலைமறைவாக இருந்த ராபியா, சபீர் கைது செய்யப்பட்டனர். பக்ருதீனுக்கு போலிஸார் வலை வீசியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தாய் மகனை நேற்று முன் தினம் (டிச.,17) நீதிமன்றத்தில் ஆஜர் செய்த தனிப்படையினர் நீதிமன்ற ஆணைப்படி சிறையில் அடைத்துள்ளனர்
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!