Tamilnadu
கடந்த ஆண்டை விட சுமார் ரூ.2,000 கோடி அதிக வருவாய்... அசத்தும் பத்திரப் பதிவுத்துறை!
தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பத்திரப்பதிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகள் மற்றும் முறைகேடுகளைக் களையும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக துறையின் வருவாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிதியாண்டில் பதிவுத் துறையின் வருவாய் 10.12.2021 அன்று ரூ.9,000 கோடியை கடந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், பதிவுத்துறையில் மேற்கொள்ளப்படும் சிறப்பு முயற்சிகளின் பயனாக நடப்பு ஆண்டில் ரூ.15,000 கோடி வருவாய் இலக்கு அடையப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிதியாண்டில் மேற்படி இலக்கினை அடைய அனைத்து உதவி பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்களை அரசின் வருவாயை பெருக்குவதில் முழு கவனம் செலுத்துமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிதியாண்டில் 10.12.2021 வரை ஈட்டப்பட்டுள்ள ரூ.9000.36 கோடி வருவாயானது, 2020-21 நிதியாண்டில் டிசம்பர் 2020 முடிய அடைந்த ரூ.7030.59 கோடி வருவாயினை விட ரூ.1969.77 கோடி அதிகமாகும்.
வழிகாட்டி மதிப்புக்கு குறையாமல் ஆவண சொத்துக்களின் மதிப்பை உறுதி செய்தல், ஆவணங்கள் சரியாக இருப்பின் அவற்றைப் பதிவு செய்து உடனடியாக விடுவித்தல், சிறப்பு முயற்சிகள் மேற்கொண்டு தணிக்கை இழப்புகளை வசூலித்தல் முதலான யுக்திகளைக் கையாண்டு ரூ.15,000 கோடி வருவாய் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!