Tamilnadu
பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தி; கடலில் விழச்சென்ற பெண்ணை காப்பாற்றிய ரோந்து போலிஸ் - குவியும் பாராட்டு!
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் ராஜா என்ற காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் கடலில் இறங்கி சிறிது தூரம் சென்றதைக் பார்த்துள்ளார். உடனே கடலில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார்.
பின்னர், அவர் குறித்து விசாரணை நடத்தினார். இதில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும் கடலில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, கணவர் இறந்த நிலையில் தனது பிள்ளைகள் கைவிட்டுவிட்டனர். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக போலிஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலிஸார் அவரது மகனைக் காவல்நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர் ராஜாவுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!