Tamilnadu
பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தி; கடலில் விழச்சென்ற பெண்ணை காப்பாற்றிய ரோந்து போலிஸ் - குவியும் பாராட்டு!
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் ராஜா என்ற காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் கடலில் இறங்கி சிறிது தூரம் சென்றதைக் பார்த்துள்ளார். உடனே கடலில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார்.
பின்னர், அவர் குறித்து விசாரணை நடத்தினார். இதில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும் கடலில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, கணவர் இறந்த நிலையில் தனது பிள்ளைகள் கைவிட்டுவிட்டனர். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக போலிஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலிஸார் அவரது மகனைக் காவல்நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர் ராஜாவுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!