Tamilnadu
“சண்டையால் பேசாமல் இருந்த காதலி.. விபரீத முடிவெடுத்த காதலன்” : நடந்தது என்ன?
சென்னை அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமாரிடம் அந்தப் பெண் பேசாமல் இருந்துள்ளார். இதனால் செந்தில் குமார் மன வருத்தத்திலிருந்துள்ளார்.
இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!