Tamilnadu
சாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரம்... போலிஸில் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்: குவியும் பாராட்டு!
சென்னை பெரம்பூர் வினஸ் மார்கெட் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 12ம் வகுப்பு படிக்கும் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகிய மூன்று மாணவிகள் பள்ளி முடிந்ததும் மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, சாலையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்துள்ளது. இதை மாணவிகள் எடுத்துப் பார்த்தபோது அதில் பணம் இருந்திருக்கிறது. பிறகு மாணவிகள் இந்த கவரை பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தியிடம் வழங்கினர்.
அந்த கவரில் இருந்து பணத்தை எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எண்ணிப் பார்த்தபோது ரூ. 10 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் பணத்தைச் செம்பியம் குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தார். அப்போது காவல் ஆய்வாளர் கோமதி காவல்நிலையத்தில் இல்லை.
இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கோமதி அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தி, மாணவிகள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆயோரை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
மேலும், மாணவிகளுக்கு ரூ.500 கொடுத்து கவுரவித்தார். இதையடுத்து பணம் தவறவிட்டவர்கள் உரிய ஆதாரங்களைக் கூறி பணத்தை வாங்கிச் செல்லலாம் என அறிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட த.வெ.க அரசுக்கு என்ன பயம்? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
Fair Delimitation வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது : பொதுச் செயலாளர் துரைமுருகன் திட்டவட்டம்!
-
திராவிட மாடல் திட்டங்களை காப்பி அடித்த முதலமைச்சர் விஜய் : இதுதான் த.வெ.க அரசின் பெரிய சாதனை!
-
“இது ஜால்ரா பட்ஜெட்.. எங்கள் கேள்விகளுக்கு முடிந்தால் முதலமைச்சர் பதில் சொல்லட்டும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
வெற்று பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது வேளாண் நிதிநிலை அறிக்கை : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!