Tamilnadu
சாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரம்... போலிஸில் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்: குவியும் பாராட்டு!
சென்னை பெரம்பூர் வினஸ் மார்கெட் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 12ம் வகுப்பு படிக்கும் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகிய மூன்று மாணவிகள் பள்ளி முடிந்ததும் மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, சாலையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்துள்ளது. இதை மாணவிகள் எடுத்துப் பார்த்தபோது அதில் பணம் இருந்திருக்கிறது. பிறகு மாணவிகள் இந்த கவரை பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தியிடம் வழங்கினர்.
அந்த கவரில் இருந்து பணத்தை எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எண்ணிப் பார்த்தபோது ரூ. 10 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் பணத்தைச் செம்பியம் குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தார். அப்போது காவல் ஆய்வாளர் கோமதி காவல்நிலையத்தில் இல்லை.
இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கோமதி அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தி, மாணவிகள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆயோரை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
மேலும், மாணவிகளுக்கு ரூ.500 கொடுத்து கவுரவித்தார். இதையடுத்து பணம் தவறவிட்டவர்கள் உரிய ஆதாரங்களைக் கூறி பணத்தை வாங்கிச் செல்லலாம் என அறிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!