Tamilnadu
தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு வீர வணக்கம்.. கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்திய உதகை மக்கள்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் முப்படைத் தளபதி பிபின் ராவுத் அவரது மனைவி உட்பட 14 ராணுவ வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி , தீப்பிடித்து எரிந்ததில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடலுக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட ராணுவ அதிகாரிகள் அவர் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு நடத்தி ஆங்காங்கே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு அரசு சார்பில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில் இரண்டாவது நாளாக அப்பகுதி மக்களிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!