Tamilnadu

”அயராது பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - மழை பாதிப்புகள் குறித்து கொளத்தூரில் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் போர்க்கால அடிப்படையில் வெள்ளப் பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நடைபெற்று வரும் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (10.12.2021) கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Also Read: “சதுப்புநில உயிரினங்களை காக்கும் சூழலியல் பூங்கா”: முதல்வர் திறந்து வைத்த பள்ளிக்கரணை பூங்காவின் பயனென்ன?