Tamilnadu
ஸ்கேன் எடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மருத்துவர் சஸ்பெண்ட்!
மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு இளம்பெண் ஒருவர் ஸ்கேன் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தி அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அடுத்த நாளும் அந்தப் பெண் பரிசோதனை மையத்திற்கு வந்தபோது மீண்டும் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணின் பெற்றோர்கள் இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் ரேடியாலஜி துறைத் தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இது குறித்தான அறிக்கை சென்னை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் சக்கரவர்த்தியை சஸ்பெண்ட் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !