Tamilnadu
ஆட்டை கடித்ததால் நாய் அடித்துக் கொலை.. 2 பேர் கைது : நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று ஆட்டை கடித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாஸ் மற்றும் உடன் இருந்த குமார், இசக்கி முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு ஆட்டை கடித்த நாயைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இவர்கள் ஆட்டை கொடூரமாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நாயைக் கொடூரமாகக் கொலை செய்த தாஸ், இசக்கி முத்து ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை போலிஸார் தேடி வருகின்றனர்.
ஆட்டை கடித்ததால் நாய் ஒன்றை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!