Tamilnadu
ஆட்டை கடித்ததால் நாய் அடித்துக் கொலை.. 2 பேர் கைது : நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று ஆட்டை கடித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாஸ் மற்றும் உடன் இருந்த குமார், இசக்கி முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு ஆட்டை கடித்த நாயைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இவர்கள் ஆட்டை கொடூரமாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நாயைக் கொடூரமாகக் கொலை செய்த தாஸ், இசக்கி முத்து ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை போலிஸார் தேடி வருகின்றனர்.
ஆட்டை கடித்ததால் நாய் ஒன்றை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!