Tamilnadu
ஆட்டை கடித்ததால் நாய் அடித்துக் கொலை.. 2 பேர் கைது : நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று ஆட்டை கடித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாஸ் மற்றும் உடன் இருந்த குமார், இசக்கி முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு ஆட்டை கடித்த நாயைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இவர்கள் ஆட்டை கொடூரமாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நாயைக் கொடூரமாகக் கொலை செய்த தாஸ், இசக்கி முத்து ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை போலிஸார் தேடி வருகின்றனர்.
ஆட்டை கடித்ததால் நாய் ஒன்றை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!