Tamilnadu
திருச்சியில் டீசலுக்கு பணம் கேட்டபோது நடந்த துணிகர சம்பவம் : போலிஸ் சொல்லும் தகவல்!
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் முசிறியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ. 2 ஆயிரத்திற்கு டீசல் நிரப்பியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசலுக்கான காசு கெட்டபோது அவர், திடீரென வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்சி - சேலம் சாலையில் சண்முகம் செல்வது போலிஸாருக்கு தெரியவந்தது. பிறகு அந்த சலையில் பேரிகார்டுகளை வைத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, சண்முகம் ஜீப்பிலிருந்து இறங்கித் தப்பித்து ஓடினார். இவரை துரத்திச் சென்ற போலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரனாகப் பேசியதால் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் டீசலுக்கு பணம் தராமல் தப்பிச் சென்றவரை மடக்கிப் பிடித்த போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !