Tamilnadu
திருச்சியில் டீசலுக்கு பணம் கேட்டபோது நடந்த துணிகர சம்பவம் : போலிஸ் சொல்லும் தகவல்!
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் முசிறியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ. 2 ஆயிரத்திற்கு டீசல் நிரப்பியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசலுக்கான காசு கெட்டபோது அவர், திடீரென வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்சி - சேலம் சாலையில் சண்முகம் செல்வது போலிஸாருக்கு தெரியவந்தது. பிறகு அந்த சலையில் பேரிகார்டுகளை வைத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, சண்முகம் ஜீப்பிலிருந்து இறங்கித் தப்பித்து ஓடினார். இவரை துரத்திச் சென்ற போலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரனாகப் பேசியதால் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் டீசலுக்கு பணம் தராமல் தப்பிச் சென்றவரை மடக்கிப் பிடித்த போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!