Tamilnadu
திருச்சியில் டீசலுக்கு பணம் கேட்டபோது நடந்த துணிகர சம்பவம் : போலிஸ் சொல்லும் தகவல்!
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் முசிறியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ. 2 ஆயிரத்திற்கு டீசல் நிரப்பியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசலுக்கான காசு கெட்டபோது அவர், திடீரென வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்சி - சேலம் சாலையில் சண்முகம் செல்வது போலிஸாருக்கு தெரியவந்தது. பிறகு அந்த சலையில் பேரிகார்டுகளை வைத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, சண்முகம் ஜீப்பிலிருந்து இறங்கித் தப்பித்து ஓடினார். இவரை துரத்திச் சென்ற போலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரனாகப் பேசியதால் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் டீசலுக்கு பணம் தராமல் தப்பிச் சென்றவரை மடக்கிப் பிடித்த போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!