Tamilnadu
திருமணம் செய்வதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடி: காதலன் மீது போலிஸில் புகார் கொடுத்த ஜூலி!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் என்பவரைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், காவல்நிலையத்தில் காதலன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் நடிகை ஜூலி.
இந்த புகாரில்,"அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ். இவரும், நானும் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து நெருக்கமாகப் பழகிவந்தோம். என்னை, திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். இதனால் அவருக்கு இருசக்கர வாகனம், தங்க செயின், ஃபிரிட்ஜ் என ரூ.2.30 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காதலை முறித்துக் கொண்டார்.
மேலும், தொடர்ந்து பணம் கேட்டு என்னை மிரட்டி வருகிறார். இதனால் மனை உளைச்சல் ஏறப்பட்டுள்ளது. எனவே திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த புகாரைக் கொண்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!