Tamilnadu
காதலன் மீது ஆசிட் வீசிய காதலி... விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் மீது ஜெயந்தி கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து காதலன் ராஜேஷ் மீது வீசியுள்ளார் ஜெயந்தி. பின்னர் கத்தியால் அவரை குத்திவிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மீது ஆசிட் வீசி, காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!