Tamilnadu
காதலன் மீது ஆசிட் வீசிய காதலி... விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் மீது ஜெயந்தி கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து காதலன் ராஜேஷ் மீது வீசியுள்ளார் ஜெயந்தி. பின்னர் கத்தியால் அவரை குத்திவிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மீது ஆசிட் வீசி, காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!