Tamilnadu
மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்த சிறுவனுக்குச் நேர்ந்த சோகம்!
சென்னை, கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சுடவைத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக தண்ணீரில் விரலை விட்டுள்ளார். அப்போது, சிறுவன் ஷியாம் மீது மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!