Tamilnadu
மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்த சிறுவனுக்குச் நேர்ந்த சோகம்!
சென்னை, கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சுடவைத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக தண்ணீரில் விரலை விட்டுள்ளார். அப்போது, சிறுவன் ஷியாம் மீது மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!