Tamilnadu
மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்த சிறுவனுக்குச் நேர்ந்த சோகம்!
சென்னை, கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சுடவைத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக தண்ணீரில் விரலை விட்டுள்ளார். அப்போது, சிறுவன் ஷியாம் மீது மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!