Tamilnadu
மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்த சிறுவனுக்குச் நேர்ந்த சோகம்!
சென்னை, கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சுடவைத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக தண்ணீரில் விரலை விட்டுள்ளார். அப்போது, சிறுவன் ஷியாம் மீது மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!