Tamilnadu
அரசை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க மாநில நிர்வாகி கைது.. போலிஸார் நடவடிக்கை!
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என்றும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்தனர்.
பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம், திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் இன்று அகோரத்தை கைது செய்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!