Tamilnadu
அரசை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க மாநில நிர்வாகி கைது.. போலிஸார் நடவடிக்கை!
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என்றும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்தனர்.
பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம், திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் இன்று அகோரத்தை கைது செய்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!