Tamilnadu
அரசை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க மாநில நிர்வாகி கைது.. போலிஸார் நடவடிக்கை!
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என்றும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்தனர்.
பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம், திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் இன்று அகோரத்தை கைது செய்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!