Tamilnadu
அரசை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க மாநில நிர்வாகி கைது.. போலிஸார் நடவடிக்கை!
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என்றும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்தனர்.
பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம், திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் இன்று அகோரத்தை கைது செய்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!