Tamilnadu

தொடர் கனமழை.. நாளை 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட காடலோரே மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றிலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்தது தமிழ்நாடு அரசு” : ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் பெருமிதம்!