Tamilnadu
ஆட்டுக் குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்.. ஆரணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா லஷ்மி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆடு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதேபோல் நாயும் அதேநோளில் குட்டிகளை ஈன்றது.
இதையடுத்து ஆட்டுக்குட்டிகளுக்கு, தாய் ஆடு சரியாகப் பால் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பால் கிடைக்காமல் பசியால் வாடிய குட்டி ஆடுகள், நாயிடம் பால் குடித்துள்ளன. அப்போது நாய் எந்தவிதமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதைப் போலவே ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது.
இந்த ஆச்சரியத்தைப் பார்க்கக் கிராம மக்கள் ஒவ்வொருவராக மல்லிகா லக்ஷ்மியின் வீட்டிற்கு வந்து ஆட்டுக்கூட்டிக்கு நாய் பால் கொடுப்பதை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
“கொள்கை உரமும், தொண்டர்களின் நெஞ்சுரமும்தான் தி.மு.க.வின் பலம்...” - முரசொலி பெருமிதம்!
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!