Tamilnadu
ஆட்டுக் குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்.. ஆரணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா லஷ்மி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆடு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதேபோல் நாயும் அதேநோளில் குட்டிகளை ஈன்றது.
இதையடுத்து ஆட்டுக்குட்டிகளுக்கு, தாய் ஆடு சரியாகப் பால் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பால் கிடைக்காமல் பசியால் வாடிய குட்டி ஆடுகள், நாயிடம் பால் குடித்துள்ளன. அப்போது நாய் எந்தவிதமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதைப் போலவே ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது.
இந்த ஆச்சரியத்தைப் பார்க்கக் கிராம மக்கள் ஒவ்வொருவராக மல்லிகா லக்ஷ்மியின் வீட்டிற்கு வந்து ஆட்டுக்கூட்டிக்கு நாய் பால் கொடுப்பதை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !