Tamilnadu
ஆட்டுக் குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்.. ஆரணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா லஷ்மி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆடு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதேபோல் நாயும் அதேநோளில் குட்டிகளை ஈன்றது.
இதையடுத்து ஆட்டுக்குட்டிகளுக்கு, தாய் ஆடு சரியாகப் பால் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பால் கிடைக்காமல் பசியால் வாடிய குட்டி ஆடுகள், நாயிடம் பால் குடித்துள்ளன. அப்போது நாய் எந்தவிதமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதைப் போலவே ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது.
இந்த ஆச்சரியத்தைப் பார்க்கக் கிராம மக்கள் ஒவ்வொருவராக மல்லிகா லக்ஷ்மியின் வீட்டிற்கு வந்து ஆட்டுக்கூட்டிக்கு நாய் பால் கொடுப்பதை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!