Tamilnadu
ஆட்டுக் குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்.. ஆரணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா லஷ்மி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆடு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதேபோல் நாயும் அதேநோளில் குட்டிகளை ஈன்றது.
இதையடுத்து ஆட்டுக்குட்டிகளுக்கு, தாய் ஆடு சரியாகப் பால் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பால் கிடைக்காமல் பசியால் வாடிய குட்டி ஆடுகள், நாயிடம் பால் குடித்துள்ளன. அப்போது நாய் எந்தவிதமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதைப் போலவே ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது.
இந்த ஆச்சரியத்தைப் பார்க்கக் கிராம மக்கள் ஒவ்வொருவராக மல்லிகா லக்ஷ்மியின் வீட்டிற்கு வந்து ஆட்டுக்கூட்டிக்கு நாய் பால் கொடுப்பதை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!