Tamilnadu
எஞ்சினில் குடைச்சல்; ஷாக்கான மெக்கானிக்; R15ல் குடியிருந்த பாம்பு பிடிபட்டது எப்படி? தென்காசியில்பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் பகுதியை சேர்ந்த லத்திஸ் என்பவரது இருசக்கர வாகனத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து அடிக்கடி சத்தம் வந்ததை கண்ட அவர் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு பழுது நீக்குவதற்காக வாகனத்தை விட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மெக்கானிக் இருசக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்து கொண்டிக்கும் போது உள்ளே பாம்பு இருப்பதைக் கண்ட அவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தை விசாலமான இடத்திற்கு கொண்டு சென்று அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை உயிருடன் மீட்டனர்.
உயிருடன் மீட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்ததாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பாம்பை காட்டுப்பகுதிக்குள் விட்டனர் இதனையடுத்து இரு சக்கர வாகன உரிமையாளர் லத்தீஸ் தீயணைப்பு துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தார்...
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!