Tamilnadu
எஞ்சினில் குடைச்சல்; ஷாக்கான மெக்கானிக்; R15ல் குடியிருந்த பாம்பு பிடிபட்டது எப்படி? தென்காசியில்பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் பகுதியை சேர்ந்த லத்திஸ் என்பவரது இருசக்கர வாகனத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து அடிக்கடி சத்தம் வந்ததை கண்ட அவர் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு பழுது நீக்குவதற்காக வாகனத்தை விட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மெக்கானிக் இருசக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்து கொண்டிக்கும் போது உள்ளே பாம்பு இருப்பதைக் கண்ட அவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தை விசாலமான இடத்திற்கு கொண்டு சென்று அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை உயிருடன் மீட்டனர்.
உயிருடன் மீட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்ததாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பாம்பை காட்டுப்பகுதிக்குள் விட்டனர் இதனையடுத்து இரு சக்கர வாகன உரிமையாளர் லத்தீஸ் தீயணைப்பு துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தார்...
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!