Tamilnadu
ரயில் தண்டவாள மின் கம்பியில் மாட்டிக்கொண்ட பட்டம்... எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவன் அப்துல் காசிம். இவர் கடந்த 21ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து வ.உ.சி நகர் ரயில்வே யார்டில் பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது பட்டம் ஒன்றின் நூல் அறுந்து, தண்டவாளத்தின் மேலே செல்லும் மின்சாரக் கம்பியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதை எடுப்பதற்காக அப்துல் காசிம் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது ஏறி பட்டத்தை எடுக்க முயன்றார்.
அப்போது, சிறுவனின் கை மின்சாரக் கம்பியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த சக சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனே சிறுவன் அப்துல் காசிமை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அப்துல் காசிம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!