Tamilnadu
“அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” : தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவியின் தாயாரிடம் உறுதியளித்த அமைச்சர்!
கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக, மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கடிதம் எழுதிவைத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலிஸார், யாரேனும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, மாணவியின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும் என மாணவியின் தாயாரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Also Read
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!