Tamilnadu
“அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” : தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவியின் தாயாரிடம் உறுதியளித்த அமைச்சர்!
கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக, மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கடிதம் எழுதிவைத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலிஸார், யாரேனும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, மாணவியின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும் என மாணவியின் தாயாரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!