Tamilnadu
“அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” : தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவியின் தாயாரிடம் உறுதியளித்த அமைச்சர்!
கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக, மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கடிதம் எழுதிவைத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலிஸார், யாரேனும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, மாணவியின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும் என மாணவியின் தாயாரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!