Tamilnadu
திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்... நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். காரில் கனிமொழி, சுமலதா, ரிஷிகா ஆகிய மூன்று பேர் இருந்துள்ளனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.
இதில் காரை ஓட்டிவந்த சீனிவாசலு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து சீனிவாசலுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த சீனிவாசலுவுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
திருமணம் முடிந்த ஒரே நாளில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!