Tamilnadu
திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்... நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். காரில் கனிமொழி, சுமலதா, ரிஷிகா ஆகிய மூன்று பேர் இருந்துள்ளனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.
இதில் காரை ஓட்டிவந்த சீனிவாசலு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து சீனிவாசலுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த சீனிவாசலுவுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
திருமணம் முடிந்த ஒரே நாளில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலீடுகள் விவகாரம் : திமுக மீது பொய் பழி.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் கொடுத்த பதிலடி என்ன?
-
நடிகர் ரவி மோகன் வீட்டில் வைரச் சங்கிலி திருட்டு : காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!
-
“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!
-
முதலீடுகள் குறித்த திமுக மீதான விமர்சனம்.. - பொய்யை உடைத்து கீர்த்தனாவுக்கு TRB ராஜா கொடுத்த பதிலடி என்ன?
-
“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!