Tamilnadu
15 சீர்வரிசை தட்டுகளுடன் விமர்சையாக பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலிஸார்: நெகிழ்ச்சி சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா. இவர் சென்னை யானைகவுனி காவல்நிலையத்தில் காவலராக உள்ளார். காவலர் விஷ்ணு பிரியாவுக்கு கடந்த ஆண்டு ஜெயந்திரேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ்ணு பிரியாவுக்கு வளைகாப்பு நடத்த சக காவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று விஷ்ணு பிரியாவிற்கு காவல்நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
மேலும் தேங்காய், பழம் உட்பட 15 சீர்வரிசை தட்டுகள் மற்றும் ஐந்து வகையான உணவுகளுடன் பெற்றோர்கள் நடத்தினால் எப்படி இருக்குமோ அதேபோன்று எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை போலிஸார் நடத்தியுள்ளனர்.
சக காவலர்களின் இந்த அன்பைப் பார்த்து தம்பதிகள் நெகிழ்ந்துபோயினர். இதுபோல் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு போலிஸார் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்து போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Also Read
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Delimitation : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய திட்டம்!