Tamilnadu
15 சீர்வரிசை தட்டுகளுடன் விமர்சையாக பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலிஸார்: நெகிழ்ச்சி சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா. இவர் சென்னை யானைகவுனி காவல்நிலையத்தில் காவலராக உள்ளார். காவலர் விஷ்ணு பிரியாவுக்கு கடந்த ஆண்டு ஜெயந்திரேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ்ணு பிரியாவுக்கு வளைகாப்பு நடத்த சக காவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று விஷ்ணு பிரியாவிற்கு காவல்நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
மேலும் தேங்காய், பழம் உட்பட 15 சீர்வரிசை தட்டுகள் மற்றும் ஐந்து வகையான உணவுகளுடன் பெற்றோர்கள் நடத்தினால் எப்படி இருக்குமோ அதேபோன்று எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை போலிஸார் நடத்தியுள்ளனர்.
சக காவலர்களின் இந்த அன்பைப் பார்த்து தம்பதிகள் நெகிழ்ந்துபோயினர். இதுபோல் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு போலிஸார் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்து போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!