Tamilnadu
நவ.,26,27ல் சென்னையில் மீண்டும் அதி கனமழைக்கு வாய்ப்பு; மக்களை எச்சரிக்கும் வானிலை மையம்!
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் அதன் இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.
அது மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும். இதனால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற தென் மாவட்டங்களில் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 35 செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கில் நகர்ந்து இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போது, அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் குறைவான மழை இருக்கும்.
அதை அடுத்த இரண்டு நாட்களுக்கு, நவ. 26, 27 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது புயலாக மாற வாய்ப்பு இல்லை.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!