Tamilnadu
ஓடும் பேருந்தில் காதல் ஜோடியை வெட்டிய உறவினர்கள்... ராமநாதபுரத்தில் வெறிச்செயல்.. 2 பேர் கைது!
ஓடும் பேருந்தில் காதல் ஜோடியை வாளால் வெட்டிய இருவரை போலிஸார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஜஸ்டின். இவரது மகன் வினித் (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் பில்கேஸ் (22), என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடத்த இருந்த நிலையில், நவ.20ஆம் தேதி பில்கேஸ் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினித்துடன் கோவை சென்றார்.
அங்கிருந்து இன்று காலை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலிஸில் பாதுகாப்பு கேட்டு சரண் அடைந்தனர். போலிஸார் இருவருக்கும் திருமணம் செய்த நிலையில், இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானம் பேசினர்.
இதையடுத்து வினித், பில்கேஸ், வினித்தின் தந்தை ஜஸ்டின், தாய் குளோரியா, ஆகியோர் ஊருக்கு அரசுப் பேருந்தில் புறப்பட்டு சென்றனர். மண்டபம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது பேருந்தில் ஏறிய பெண்ணின் அண்ணன் ஆண்டனி மற்றும் உறவினர் யாகப்பா ஆகிய இருவரும் வாள் மற்றும் பிளேடால் பேருந்தில் காதல் ஜோடியையும், தடுத்த ஜஸ்டின், குளோரியா ஆகியோரையும் சரமாரியாக வெட்டினர்.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தை விட்டு ஓடினர். பின்னர் அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் யாகப்பா மற்றும் ஆண்டனி ஆகிய இருவரையும் போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
காயமடைந்த நால்வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாகப்பா மற்றும் ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்த மண்டபம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!