Tamilnadu
“சத்தியம் வாங்கிய சாமியார் கணவர்.. வீட்டு தோட்டத்தில் உடலை புதைத்த மனைவி” : திடுக்கிடும் சம்பவம்!
சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் கருணாநிநி நகரில் வசித்த நாகராஜ் - லட்சுமி என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி அமெரிக்காவின் வசித்து வருகிறார். மகள் மட்டும் பெற்றோருடன் இருக்கிறார்.
இந்த நிலையில் முதியவர் நாகராஜ் தனது தோட்டத்தில் கோயில் அமைத்து பூஜை செய்தும் சாமிவந்து அருள்வாக்கு கூறியும் வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி நாகராஜிக்கு நெஞ்சுவலி வந்துள்ளது. அப்போது தனது மனைவி லட்சுமியிடம் தன்னை தோட்டத்தில் உள்ள கோயில் அருகே புதைக்குமாறு சத்தியம் வாங்கியுள்ளார்.
கணவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற கணவன் நாகராஜை தோட்டத்தில் லட்சுமி புதைத்துள்ளார். வேலை சம்மந்தமாக வெளியூர் சென்று நேற்று வீடு வந்த மகள் தந்தையை காணமல் இருப்பது குறித்து கேட்டபோது நடந்தவைகளை தாய் லட்சுமி கூறியதையடுத்து ஆத்திரமடைந்த மகள் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற போலிஸார் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வு முடிவை பொருத்தே விசாரணை அமையும் என்று போலிஸார் தெரிவித்தனர். சோழிங்கநல்லூர் தாசில்தார் நேரடி பார்வையில் உடலை மீட்டு பிரோத பரிசோதனை செய்ய போலிஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!