Tamilnadu
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த சென்னை இளைஞர் - விபரீத முடிவு எடுத்த சோகம்!
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்குக் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், முருகன் தனது செல்போனில் ஆன்லைன் விளையாடி வந்துள்ளார். இதனால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வாங்கி அதில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
பின்னர், தொடர்ச்சியாக ஆன்லைன் விளையாடியதால் பணத்தை இழந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணம் இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!