Tamilnadu
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த சென்னை இளைஞர் - விபரீத முடிவு எடுத்த சோகம்!
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்குக் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், முருகன் தனது செல்போனில் ஆன்லைன் விளையாடி வந்துள்ளார். இதனால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வாங்கி அதில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
பின்னர், தொடர்ச்சியாக ஆன்லைன் விளையாடியதால் பணத்தை இழந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணம் இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!