Tamilnadu
செயினை பறித்துவிட்டு காரை கடத்திச் சென்ற கொள்ளை கும்பல்.. சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலிஸ்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரை 4 பேர் கொண்ட கும்பல் மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு, அவருக்கு சொந்தமான மாருதி கார் ஒன்றையும் திருடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்த போலிஸாரிடம் தங்கராஜ் புகார் அளித்ததன்பேரில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கோவை மாவட்ட பொள்ளாச்சி நோக்கிய கார் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த காவலர்கள் காரை அடையாளம் கண்டு விரட்டி முடிக்க முற்பட்டனர். மேலும் போலிஸாரின் வாகன சோதனையிலும் கார் நிற்காமல் சென்றுள்ளது.
இதனையடுத்து காரை நிறுத்தாமல் சென்ற கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில் விடாமல் துரத்துச் சென்று போலிஸார் அவர்களை சின்னபாளையம் பகுதியில் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.
போலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் ராபின், அருள்ராஜ், சேவக் மற்றும் மாரியப்பன் ஆகியோரை கைது செய்து, தங்கராஜிடமிருந்து பறித்துச் சென்ற நகை மற்றும் காரை போலிஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !