Tamilnadu
“கனமழையால் வீட்டின் மீது சரிந்து விழுந்த ராட்சத பாறை.. 2 பேர் உடல் நசுங்கி பலி” : வேலூரில் நடந்த சோகம்!
வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் காகித பட்டறை பகுதியில் தொடர் மழையால் மண் சரிந்து அப்பகுதியில் இருந்த பெரிய பாறை மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்தது. ஏற்கனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அங்கே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மலைப்பகுதியில் வீடுகட்டி வசித்து வந்த, நிஷாந்தி, ரமணி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வசித்து குடிசை வீட்டின் மீது 15 டன் அளவுள்ள பெரிய பாறை ஒன்று வீட்டில் விழுந்து நசுங்கியது. பாறைக்கடியில் 2 பேர் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணிகள் நடந்தது. இதில் ரமணி, நிஷாந்தி உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!