Tamilnadu
”மழைக் காலமும் மாநகராட்சியின் அறிவுரைகளும்” - பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
* மழை, வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட 20 நொடிகள் முறையாக அடிக்கடி சோப்பு உபயோகப்படுத்தி கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
* குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து பருகவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும்.
* பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும். திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.
* காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை/மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயசிகிச்சை செய்யக் கூடாது.
* வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் (ORS Solution) மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும், உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
* குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகைப்பிரித்து தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!