Tamilnadu
"மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி பேருந்துகள் இயங்கும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவுமுதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி வருகிறது.
இந்நிலையில் மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விருதுநகர் மாவட்டம், திருவிலிபுத்தூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்," தீப ஒளித் திருநாள் பண்டிகை கொண்டாடுவதற்காக மக்கள் பத்திரமாக அரசு பேருந்துகளில் சொந்த ஊர் சென்றனர்.
அதுபோல் விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள் பத்திரமாக வந்து செல்ல சிறப்புப் பேருந்துகள் தயாராக உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வந்தாலும் எந்தவிதமான தடையும் இன்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கடந்த ஆண்டு தீப ஓளித் திருநாளை விட இந்த வருடம் போக்குவரத்துறை அதிக லாபம் ஈட்டியுள்ளது. பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டாலும் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டி வருகிறது என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!