Tamilnadu
"மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி பேருந்துகள் இயங்கும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவுமுதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி வருகிறது.
இந்நிலையில் மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விருதுநகர் மாவட்டம், திருவிலிபுத்தூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்," தீப ஒளித் திருநாள் பண்டிகை கொண்டாடுவதற்காக மக்கள் பத்திரமாக அரசு பேருந்துகளில் சொந்த ஊர் சென்றனர்.
அதுபோல் விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள் பத்திரமாக வந்து செல்ல சிறப்புப் பேருந்துகள் தயாராக உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வந்தாலும் எந்தவிதமான தடையும் இன்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கடந்த ஆண்டு தீப ஓளித் திருநாளை விட இந்த வருடம் போக்குவரத்துறை அதிக லாபம் ஈட்டியுள்ளது. பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டாலும் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டி வருகிறது என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !