Tamilnadu
"தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயார்": ராதாகிருஷ்ணன் தகவல்!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, தாலுகாக மருத்துவமனைகள் தயாராக உள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 770 ஜீப் மருத்துவக்குழுக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள், பாம்புகடி, பூச்சிக்கடிக்கான மருந்துகள், ஐவி திரவங்கள், டெட்டனஸ் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காகப் பொதுமக்கள் 044 - 29510400, 044 - 29510500, 9444340496, 8754448477 என்ற எண்ணுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!