Tamilnadu
"தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயார்": ராதாகிருஷ்ணன் தகவல்!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, தாலுகாக மருத்துவமனைகள் தயாராக உள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 770 ஜீப் மருத்துவக்குழுக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள், பாம்புகடி, பூச்சிக்கடிக்கான மருந்துகள், ஐவி திரவங்கள், டெட்டனஸ் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காகப் பொதுமக்கள் 044 - 29510400, 044 - 29510500, 9444340496, 8754448477 என்ற எண்ணுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!