Tamilnadu
"தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயார்": ராதாகிருஷ்ணன் தகவல்!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, தாலுகாக மருத்துவமனைகள் தயாராக உள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 770 ஜீப் மருத்துவக்குழுக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள், பாம்புகடி, பூச்சிக்கடிக்கான மருந்துகள், ஐவி திரவங்கள், டெட்டனஸ் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காகப் பொதுமக்கள் 044 - 29510400, 044 - 29510500, 9444340496, 8754448477 என்ற எண்ணுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !