Tamilnadu
குடித்துவிட்டு தகராறு செய்த இளைஞர் கொலை.. 3 பேர் கைது: நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சி.எச்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இளைஞரான இவர் தினமும் குடித்து விட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் சுதாகர் வீட்டாருக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் லோகநாதன் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் சுதாகர் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு லோகநாதன் வீட்டின் முன்பு நின்று கொண்டு தகராறு செய்துள்ளார். மேலும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி லோகநாதன் குடும்பத்தினரைத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுதாகரை கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதில் மயங்கி கீழே விழுந்து சுதாகரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து சுதாகரை தாக்கிய லோகநாதன்,ஹேமநாதன், பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!