Tamilnadu
குடித்துவிட்டு தகராறு செய்த இளைஞர் கொலை.. 3 பேர் கைது: நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சி.எச்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இளைஞரான இவர் தினமும் குடித்து விட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் சுதாகர் வீட்டாருக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் லோகநாதன் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் சுதாகர் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு லோகநாதன் வீட்டின் முன்பு நின்று கொண்டு தகராறு செய்துள்ளார். மேலும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி லோகநாதன் குடும்பத்தினரைத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுதாகரை கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதில் மயங்கி கீழே விழுந்து சுதாகரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து சுதாகரை தாக்கிய லோகநாதன்,ஹேமநாதன், பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
-
பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !