Tamilnadu
“அறைக்குள் சிக்கிய 1½ வயது குழந்தை” : நவீன தொழில் நுட்ப உதவியுடன் குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர் !
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சிவச்சந்திரன். தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை தர்ஷித்துடன் கரூர் அருகே காளியப்பனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தீபாவளிக்காக வந்தனர்.
இன்று இரவு ஒன்றரை வயது தர்ஷித் உறவினர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூங்க வைத்து விட்டு பட்டாசு வெடி காரணமாக தாய் கதவை வேகமாக சாத்தியதாக கூறப்படுகிறது. வேகமாக சாத்தியதால், தானியங்கி முறையில் பொருத்தப்பட்ட அறைக் கதவு தானாக பூட்டிக் கொண்டது. குழந்தை அறைக்குள் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து குழந்தையின் அழுகுரல் கேட்டு, பெற்றோர் உறவினர்களும், கதவை திறக்க முயன்றனர். உடனடியாக கதவை வெளியிலிருந்து திறக்க முடியாத காரணத்தால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஜன்னல் வழியாக செல்போனை ஒரு குச்சியில் கட்டி வைபை தொழில்நுட்ப உதவியுடன் கேமரா மூலம் தானியங்கி பூட்டை திறந்து குழந்தையை மீட்டனர். சுமார் அரை மணி நேரம் பூட்டிய கதவுக்குள் குழந்தை அழுத நிலையில் இருந்ததைக் கண்டு பெற்றோர் பதறினர். தீயணைப்பு துறையினர் அதி நவீன தொழில் நுட்பங்களை பயன் படுத்தி அரை மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டதால் சிவச்சந்திரன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
Also Read
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!