Tamilnadu
”தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட தீவிரமடையும்” - இந்திய வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும். இதன் காரணமாக தெற்கு மற்றும் உள் தமிழ்நாடு மாவட்டங்களில் அடுத்த இரண்டு வாரம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யகூடும்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வந்த நிலையில், அடுத்த இரண்டு வாரத்திற்கான மழை குறித்த வானிலை முன்னறிவிப்பு அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வரும் வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் மழை இயல்பை ஒட்டி இருக்க வாய்ப்புள்ளது எனவும், அதன் பிறகான வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, தமிழ்நாட்டின் வட கடலோர பகுதி வெளிப்புறம், உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை இந்திய நிலப்பரப்பில் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பான அளவைவிட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது. அதேபோல் கடந்த வாரத்தில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!